20 Best Abdul Kalam Quotes in Tamil
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்
மாணவர்களுக்கான முக்கியமான பண்புகளில் ஒன்று கேள்வி கேட்பது மாணவர்களை கேள்வி கேட்க வைப்போம்
அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்து எடுங்கள் அதுதான் உண்மையான தலைமைப்பண்பு
கனவு காண்பவர்கள் அனைவருமே தோற்பதில்லை. கனவு மட்டும் காண்பவர்களே தோற்கிறார்கள்
வெற்றி என்பது உன் நிழல் போல நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும்.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் போது புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று உணரும் போது முட்டாளாகின்றான்
கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல உங்களை தூங்க விடாமல் செய்வது.
ஈடுபாடின்றி வெற்றி இல்லை ஈடுபாட்டினால் தோல்வியும் இல்லை
ஒரு மனிதனை ஜெயிப்பதை விட அவன் மனதை கொள்ளை கொள்வதே சிறந்தது.
உங்கள் குறிக்கோளில் வெற்றியடைய வேண்டுமானால் உங்கள் இலக்கில் இம்மியும் பிசகாமல் குறிவைத்து அதே சிந்தனையுடன் செயல்படவேண்டும்.
உலகிற்கு ஏற்றால் போல் தன்னையே மாற்றிக் கொள்கின்றனர் பலர் தனக்கு ஏற்றாற் போல் உலகையே மாற்றிக்கொள்கின்றனர் சிலர்.
கஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்று விடும். கண்ணை திறந்து பார் அதை நீ வென்று விடலாம்.
சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
கனவுகளை எண்ணங்களாக மாற்றுங்கள் எண்ணங்களை செயல்களாக மாற்றுங்கள்.
ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல உன்னைப்போல் சாதிக்க துடிப்பவனை மட்டுமே.
முதல் வெற்றிக்கு பிறகு ஓய்வெடுத்துவிடாதே. அடுத்தமுறை தோல்வியுற்றால் உன் முதல் வெற்றி அதிஷ்டத்தால் தான் கிடைத்தது என்று சொல்லிவிடுவார்கள்.
பயந்தால் வரலாறு படைக்க முடியாது
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை
காலத்தின் மணல் பரப்பில் உன் கால் சுவடிகளை பதிக்க விரும்பினால் உன் கால்களை தரையில் இழுத்து இழுத்து நடக்காதே.




















